தமிழர்கள் வாழ்ந்த ஐந்து வகை நிலங்கள் Five types of Lands of Tamil People


தமிழர்கள் வாழ்ந்த ஐந்து வகை நிலங்கள்
சங்க காலத்தில் வாழ்ந்த தமிழர்கள், தாங்கள் வாழ்ந்த நிலத்தை 5 வகையாகப் பிரித்தனர். அவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியன. இந்த ஐந்து வகை நிலங்களுக்கும் தனித்தனியே தெய்வம், தொழில், உணவு, மரம், பூ, பறவை, விலங்கு ஆகியன உள்ளன. அதனைப் பற்றி படிப்போம்.




குறிஞ்சி என்பது மலையும், மலை சார்ந்த இடமும் ஆகும். உதாரணமாக, ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம், ஏற்காடு போன்ற மலைப்பிரதேசங்கள் குறிஞ்சி நிலம் ஆகும். குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்கள் முருகனை வழிபட்டனர். இங்கு வாழ்ந்த மக்களைக் "குறவர்" என்று கூறுவர். இவர்களது தொழில் "தேன் எடுத்தல், கிழங்கு அகழ்தல்" ஆகியன. மலை நெல், தினை ஆகியன இவர்களின் உணவுகள். அகில், வேங்கை ஆகியவை குறிஞ்சி நிலத்தின் மரங்கள். குறிஞ்சி மலர், காந்தள் ஆகிய பூக்கள் இங்கே பூக்கும். கிளி, மயில், புலி, கரடி, சிங்கம் ஆகியவை இங்கு வசிக்கும் பறவைகள் & விலங்குகள் ஆகும்.


முல்லை என்பது காடும், காடு சார்ந்த இடமும் ஆகும். முல்லை நில மக்கள் வணங்கிய தெய்வம் திருமால் ஆவார். இங்கு வாழ்ந்த மக்களை "ஆயர்" என்று கூறுவர். இவர்களது தொழில் "ஏறுதழுவுதல், நிரை மேய்த்தல்" ஆகியன. அதாவது, ஏர் உழுதல், பசு மேய்த்தல் ஆகியன ஆகும். வரகு, சாமை ஆகியன இவர்களின் உணவுகள். கொன்றை, காயா ஆகியவை முல்லை நிலத்தில் வளரும் மரங்கள். முல்லை மலர், தோன்றி ஆகிய பூக்கள் இங்கே பூக்கும். காட்டுக் கோழி, மயில், முயல், மான், புலி ஆகியவை இங்கு வசிக்கும் பறவைகள் & விலங்குகள் ஆகும்.


மருதம் என்பது வயல், வயல் சார்ந்த இடமும் ஆகும். உதாரணமாக, தஞ்சாவூர் அருகே உள்ள வயல் சூழ்ந்த இடங்கள் மருதநிலம் ஆகும். மருதநில மக்கள் வணங்கிய தெய்வம் இந்திரன் ஆவார். இங்கு வாழ்ந்த மக்களை "உழவர்" என்று கூறுவர். இவர்களது தொழில் "நெல்லரிதல், களை பறித்தல்" ஆகியன. செந்நெல், வெண்னெல் ஆகியன இவர்களின் உணவுகள். காஞ்சி, மருதம் ஆகியவை மருதநிலத்தில் வளரும் மரங்கள். செங்கழுநீர், தாமரை ஆகிய பூக்கள் இங்கே பூக்கும். நாரை, நீர்க்கோழி, அன்னம், எருமை, நீர்நாய் ஆகியவை இங்கு வசிக்கும் பறவைகள் & விலங்குகள் ஆகும்.

 
நெய்தல் என்பது கடலும், கடல் சார்ந்த இடமும் ஆகும். உதாரணமாக, திருச்செந்தூர், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களை ஒட்டிய கடல் பகுதி நெய்தல் நிலம் ஆகும். நெய்தல் நில மக்கள் வணங்கிய தெய்வம் வருணன் ஆவார். இங்கு வாழ்ந்த மக்களை "பரதன்" என்று கூறுவர். இவர்களது தொழில் "மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்" ஆகியன. மீன், உப்பு விற்று அதன் மூலம் கிடைத்த பொருள் இவர்களின் உணவு. புன்னை, ஞாழல் ஆகியவை நெய்தல் நிலத்தில் வளரும் மரங்கள். தாழை, நெய்தல் ஆகிய பூக்கள் இங்கே பூக்கும். கடற்காகம், முதலை, சுறா ஆகியவை இங்கு வசிக்கும் பறவைகள் & விலங்குகள் ஆகும்.

 
பாலை என்பது மணல், மணல் சார்ந்த இடமும் ஆகும். பாலை நில மக்கள் வணங்கிய தெய்வம் கொற்றவை (துர்கை அம்மன்). இங்கு வாழ்ந்த மக்களை "எயினர்" என்று கூறுவர். பாலை நிலத்தில் விவசாயம் எதுவும் செய்யமுடியாது. ஆகையால், "வழிப்பறி செய்தல்" மட்டுமே இங்கு வாழ்ந்த மக்களின் தொழில். சூறையாடலால் கிடைக்கும் பொருளை, இவர்கள் உணவாக உண்டனர். இலுப்பை, பாலை ஆகியவை பாலை நிலத்தில் வளரும் மரங்கள். குரவம், பாதிரி ஆகிய பூக்கள் இங்கே பூக்கும். வலிமை இழந்த யானை, புறா, பருந்து ஆகியவை இங்கு வசிக்கும் பறவைகள் & விலங்குகள் ஆகும்.


ஒரு TNPSC தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி :

நெய்தல் நிலத்தில் வாழ்ந்த மக்களின் தொழில் எது?
a) நெல்லரிதல், களைபறித்தல்b) ஏறுதழுவுதல், நிரை மேய்த்தல்
c) தேன்எடுத்தல், கிழங்குஅகழ்தல்d) மீன்பிடித்தல், உப்புவிளைத்தல்
விடை : d) மீன்பிடித்தல், உப்புவிளைத்தல்

ஐவகை நிலங்கள்

1. குறிஞ்சி - மலையும், மலை சார்ந்த இடமும்
2. முல்லை - காடும், காடு சார்ந்த இடமும்
3. மருதம் - வயலும், வயல் சார்ந்த இடமும்
4. நெய்தல் - கடலும், கடல் சார்ந்த இடமும்
5. பாலை - மணலும், மணல் சார்ந்த இடமும்


பொது அறிவு, ஜோக்ஸ், ஆன்மீகம், சுற்றுலா, குட்டிக் கதைகள், கம்ப்யூட்டர் கோர்ஸ் (Computer Course) பற்றிய தகவல்களை தமிழில் தினமும் படிக்க கீழ்க்கண்ட Link-ஐ click செய்து Tamil World என்ற Telegram Channel-ல் இணையுங்கள். இந்த Telegram Channel-ல் உள்ள Join பட்டனை அழுத்துங்கள்.

Tamil Free E-Books Download

பொதுஅறிவு, ஆன்மீகம், ஆரோக்கியம், சிறுகதைகள், வேலை வாய்ப்புகள், பிசினஸ் முன்னேற்றம், லாபம் தரும் பணமுதலீடுகள் பற்றிய தமிழ் இ-புத்தகங்களை Download செய்ய பின்வரும் Link-ஐ Click செய்யுங்கள்.

https://pothuarivugk.blogspot.com/2020/07/ebooks.html 

பொது அறிவு, ஜோக்ஸ், ஆன்மீகம், சுற்றுலா, கம்ப்யூட்டர் கோர்ஸ் (Computer Course), குட்டிக் கதைகள் பற்றிய பல தமிழ் வீடியோக்களை  நாங்கள் யூடியூப்-பில் (YouTube)  வெளியிட்டுள்ளோம். இந்த வீடியோக்களை YouTube-ல் காண கீழ்க்கண்ட Link-ஐ click செய்யுங்கள்.

https://pothuarivugk.blogspot.com/p/youtube.html

பொது அறிவுத் தகவல்கள் படிக்க பின்வரும் Link-ஐ click செய்யுங்கள்.

https://pothuarivugk.blogspot.com/p/general-knowledge-in-tamil-agricultural.html

சிறுகதைகள் படிக்க பின்வரும் Link-ஐ click செய்யுங்கள்.

https://pothuarivugk.blogspot.com/p/tamil-short-stories.html

ஆன்மீகம் பற்றிய தகவல்கள் படிக்க பின்வரும் Link-ஐ click செய்யுங்கள்.

https://aanmeegamindia.blogspot.com/p/all.html