இந்தியாவில் ஆங்கிலேயர்கள் செய்த சீர்திருத்தங்கள் - Reforms by British People in India

ஆங்கிலேயர்கள் நம் இந்தியாவை ஆண்டபோது, இந்தியர்களைப் பல வழிகளில் மிகவும் கொடுமைப்படுத்தித் துன்புறுத்தினார்கள். இருந்த போதிலும், ஆங்கிலேயர்கள் சமுதாய மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் பலவற்றை இந்தியாவில் செய்துள்ளனர். இந்தியாவில் "கவர்னர் ஜெனரல்" பதவி வகித்த ஆங்கில ஆளுனர்கள், நம் நாட்டில் செய்த சீர்திருத்தங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு (Lord Warren Hastings) - இவர்தான் வங்காளத்தின் முதல் தலைமை ஆளுனர். இவரது ஆட்சிக் காலம் கி.பி.1772 முதல் கி.பி.1785 வரை. இவரது ஆட்சிக் காலத்தில், கி.பி 1774ல், கல்கத்தாவில் இந்தியாவின் முதல் உச்ச நீதிமன்றம் அமைக்கப்பட்டது. கி.பி 1781 ல், கல்கத்தாவில் "மதராஸா" என்ற புகழ் பெற்ற கல்வி நிறுவனத்தை இவர் ஆரம்பித்தார்.

காரன் வாலிஸ் பிரபு (Lord Corn Wallis) - இவரது ஆட்சிக் காலம் கி.பி.1786 முதல் கி.பி.1793 வரை. இவரது ஆட்சிக் காலத்தில் சிவில் சர்வீஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் காவல் துறையை முதன் முதலில் உருவாக்கியவர் காரன்வாலிஸ். இவர் கி.பி 1793ல், அன்றைய காலத்தில் இருந்த சட்டங்களை நெறிமுறைப்படுத்தினார். இவர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக நீதிபதிகளை (District Judge) நியமித்தார். இவர் நீதித்துறை மற்றும் சிவில் சர்வீஸ் துறைகளில் நிறைய சீர்திருத்தங்களைச் செய்தார். எனவே , "இந்திய பொது குடிமையியல் பணியின் தந்தை" (Father of Civil Services in India) என்று இவர் அழைக்கப்படுகிறார்.

வில்லியம் பென்டிங் பிரபு (Lord William Bentinck) - இவரது ஆட்சிக் காலம் கி.பி. 1828 முதல் கி.பி. 1835 வரை. "இந்திய கவர்னர் ஜெனரல்களில் தலைசிறந்தவர்" என்று இவர் புகழப்படுகிறார். கி.பி.1829ல், இவர் ராஜாராம் மோகன்ராய் உதவியுடன் "சதி ஒழிப்பு" என்ற புரட்சிகரமான, சமுதாயச் சீர்திருத்தச் சட்டம் கொண்டு வந்தார்.

அக்காலத்தில், கணவன் இறந்தவுடன் மனைவியும் கணவனுடன் சேர்ந்து மரணமடைந்து விட வேண்டும் என்ற கொடுமையான ஒரு பழக்கம் வட இந்தியாவில் இருந்தது. அதற்காக, கணவனின் இறந்த உடல் எரியும் போது, அந்த சிதையில் மனைவியையும் உயிருடன் தூக்கிப் போட்டு விடுவார்கள். இதற்கு, "உடன் கட்டை ஏறுதல்" அல்லது "சதி" என்று பெயர். இப்பழக்கத்தை ஒழிப்பதற்காக, வில்லியம் பென்டிங் பிரபு "சதி ஒழிப்பு" என்ற சட்டம் கொண்டுவந்தார். மேலும், இவர் பெண் சிசுக் கொலை ஒழிப்பு, நரபலி ஒழிப்பு போன்ற முக்கியமான சமுதாயச் சீர்திருத்தச் சட்டங்களைக் கொண்டு வந்தார். இவர் இந்தியாவின் முதல் மருத்துவக் கல்லூரியை (Medical College) 1835ல் கல்கத்தாவில் ஆரம்பித்தார். ஆகவே, "நவீன மேற்கத்தியக் கல்வியின் தந்தை" (Father of Modern Western Education in India) என்று வில்லியம் பென்டிங் பிரபு அழைக்கப்படுகிறார்.

டல்ஹௌசி பிரபு (Lord Dalhousie) - இவரது ஆட்சிக் காலம் கி.பி. 1848 முதல் கி.பி. 1855 வரை. முதல் இருப்புப்பாதை (இரயில் தண்டவாளம்) கி.பி. 1853ல் பம்பாய் முதல் தானே வரை போடப்பட்டு, அதில் முதல் இந்திய இரயில் ஓடியது. ஆகவே, டல்ஹௌசி பிரபு "இருப்புப்பாதையின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். 1853ல் தபால், தந்தி அனுப்பும் முறையை இந்தியாவில் இவர் தான் அறிமுகம் செய்தார். அரையணா (3 பைசா) அஞ்சல் முறையை இவர் தான் அறிமுகம் செய்தார். இவர் 1856 ல் விதவைகள் மறுமணச் சட்டம் (Widow Remarriage Act) கொண்டுவந்தார். ரூர்கி என்ற இடத்தில் இந்தியாவின் முதல் பொறியியல் கல்லூரி (Engineering College) ஆரம்பித்தவர் டல்ஹௌசி பிரபு. இதன் காரணமாக, "நவீன இந்தியாவை உருவாக்கியவர்" என்று டல்ஹௌசி பிரபு போற்றப்படுகிறார்.

கானிங் பிரபு (Lord Canning) - இவர் கி.பி. 1857ல் கல்கத்தா, பம்பாய், மெட்ராஸ் (சென்னை) ஆகிய ஊர்களில் பல்கலைக் கழகங்கள் ஆரம்பித்தார்.




ரிப்பன் பிரபு (Lord Ripon) - இவரது ஆட்சிக் காலம் கி.பி. 1880 முதல் கி.பி. 1884 வரை. இவரது ஆட்சிக் காலத்தில், 1881ல் இந்தியாவில் முதல் முதலாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 
இவர் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் (Factory Workers) நலனில் அக்கறை காட்டினார். இவர் 1881 ஆம் ஆண்டில் தொழிற்சாலை சட்டம் (Factory Act) இயற்றினார். இச்சட்டத்தின்படி, 7 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகள், ஒரு நாளில் 9 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யக்கூடாது என்று சட்டம் வந்தது.



Tamil Free E-Books Download

பொதுஅறிவு, ஆன்மீகம், ஆரோக்கியம், சிறுகதைகள், வேலை வாய்ப்புகள், பிசினஸ் முன்னேற்றம், லாபம் தரும் பணமுதலீடுகள் பற்றிய தமிழ் இ-புத்தகங்களை Download செய்ய பின்வரும் Link-ஐ Click செய்யுங்கள்.

https://pothuarivugk.blogspot.com/2020/07/ebooks.html 

பொது அறிவு, ஜோக்ஸ், ஆன்மீகம், சுற்றுலா, கம்ப்யூட்டர் கோர்ஸ் (Computer Course), குட்டிக் கதைகள் பற்றிய பல தமிழ் வீடியோக்களை  நாங்கள் யூடியூப்-பில் (YouTube)  வெளியிட்டுள்ளோம். இந்த வீடியோக்களை YouTube-ல் காண கீழ்க்கண்ட Link-ஐ click செய்யுங்கள்.

https://pothuarivugk.blogspot.com/p/youtube.html

பொது அறிவுத் தகவல்கள் படிக்க பின்வரும் Link-ஐ click செய்யுங்கள்.

https://pothuarivugk.blogspot.com/p/general-knowledge-in-tamil-agricultural.html

சிறுகதைகள் படிக்க பின்வரும் Link-ஐ click செய்யுங்கள்.

https://pothuarivugk.blogspot.com/p/tamil-short-stories.html

ஆன்மீகம் பற்றிய தகவல்கள் படிக்க பின்வரும் Link-ஐ click செய்யுங்கள்.

https://aanmeegamindia.blogspot.com/p/all.html